வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012 14:40
பள்ளி மாணவன் துள்ளித்
திரியும் நேரத்திலே
அன்பாய் அழைத்து
கறுப்புப் பலகையில்
எழுதித் தந்த ஆசான்…..
ஆசான் நமது வாழ்வின் வரம்
அது இல்லையென்றால் நமது
வாழ்வே மரம்
வகுப்பிற்குள் நுழைந்த பின்
சல்லி சல்லியாய் கல்வியை
அள்ளித் தந்த
அன்புள்ள ஆசான்
நீ இருக்கும் போது வாழ்வில்
துன்பமேது, துயரமேது
இல்லங்களில் இன்ப வாழ்வே
ஆசான்,ஆசான்,ஆசான் இப்படி
எத்தனை முறை சொன்னாலும்
சொல்லிக்கொண்டே இருக்கனும்
போல் இருக்கிறது காரணம்
நீ அள்ளித் தந்த கல்வியே….
எஸ்.எம். அம்ஹர்
தரம் - 8
தி/ அல்-முஜாஹிதா வித்
கிண்ணியா
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.