மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி; கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன்!

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி 15 வயது, 19 வயதுப்பிரிவில் சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.
கடந்த ஜூன் 13, 14 ஆம் திகதிகளில் மட்டகளப்பு வெபர் விளையாட்டரங்கில் கிழக்கு மாகாண வலயங்களுக்கிடையில் முதன் முறையாக நடைபெற்ற போட்டிகளில் கிண்ணியா மத்திய கல்லூரி இரு வயதுப் பிரிவுகளில் சம்பியனானது. இதேவேளை 19 வயதுப்பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரியுடன் இறுதிப்போட்டியில் மோதிய கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி 3:0 எனும் கோல் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்றது.
கடந்த 05 வருடங்களாக 19 வயதுப்பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரியே மாகாண சம்பியனாக தெரிவாகிவருவதாக கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.சராப்தீன் குறிப்பிட்டார்.
(இம்தியாஸ்)




Comments
RSS feed for comments to this post