கிண்ணியா வான் எல புஹாரி மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு!

கடந்த ஜுன் மாதம் 27ம் திகதி முதல் 30 ஆந்திகதி வரை நடைபெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 17, 19 வயதுகளின் கீழ்ப்பிரிவில் நடைபெற்ற 1500 மீற்றர் ஓட்டத்தில் தி/கிண்/வான் எல புஹாரி மகா வித்தியாலய மாணவர்களான செல்வன். ஐ.றிஸ்வான், செல்வன். என்.அஸ்ரப் ஆகியோர் இரண்டாம் இடங்களைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் தம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவர்கள் வெற்றிபெற ஊக்கமளித்த ஏ.ஜாபிர்(மௌலவி) – உதவி அதிபர், ஜே.றகுமத்துள்ளா – பிரதி அதிபர், ஏ.எம்.முலவ்பர் - அதிபர், எஸ்.றிஸ்வாத் - உடற்கல்வி ஆசிரியர் மற்றும்,
தேசியமட்டதிட்கு தெரிவாகிய மாணவர்கள் செல்வன். என்.அஸ்ரப், செல்வன். ஐ.றிஸ்வான் ஆகியோரையும் படத்தில் காணலாம்.



Comments
RSS feed for comments to this post