News Flash:
- கிண்ணியாவில் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குற்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!!
- புலமைப்பரிசில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் 100 நாள் விஷேட செயற்திட்டம் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் முன்னெடுப்பு
- வடமாகாண சபை தேர்தலும் முஸ்லிம் காங்கிரசின் வியூகமும்!
- தமிழ் மொழித்தின மாகாண மட்டபோட்டியில் அப்றாசுக்கு முதலாமிடம்
- முதூரில் தனிநபர் முயற்சியால் உருவாக்கப்பட்ட "தடயம்" அருங்காட்சியகம்!
உறவுகளின் உயிர்காக்கும் உன்னத பணி: கிண்ணியாவில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்!
கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் கடந்த சனிக்கிழமை (07-08-2012) கிண்ணியா மத்திய கல்லூரியில் டாக்டர் தர்மேந்திரன், டாக்டர் ராஜியா முயீஸ் தலைமையில் நடைபெற்றது.
சக்தி FM ஊடக அனுசரனையுடன் கிண்ணியன் நியூஸ் ஏற்பாடு செய்திருந்த இம்முகாமில் கிண்ணியா பிரதேச சபை ஊழியர்கள், கிண்ணியா தள வைத்தியசாலை சேவகர்கள் மற்றும் கண்டலடியூற்று இராணுவ முகாமைச்சேர்ந்த படை வீரர்கள், பொதுமக்கள் உட்பட 78 கொடையாளர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்திருந்தனர்.
உறவுகளின் உயிர்காக்கும் இவ்வுன்னத பணியை முன்னெடுப்பதற்கான உதவிக்கொடையினை கிண்ணியா சென்ட்ரல் பூட் சிட்டி மற்றும் ஹனான் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினர் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஜீலன்)



***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.