புதன்கிழமை, மே 22, 2013
   
Text Size

நேர்காணல்

எனதுஓய்வுநேரத்தையும் யாவருக்கும் உபயோகமாகும் வகையில் பயன்படுத்தவே விரும்புகின்றேன்! -ஜரீனாமுஸ்தபா

P 2பிரபலநாவலாசிரியை ஏ.சி.ஜரீனாமுஸ்தபா அவர்களுடனான

நேர்காணல்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி


கேள்வி:-

உங்களது அறிமுகம்

பதில்:-

எனது பெயர் ஏ சி ஜரீனா முஸ்தபா பிறந்தது ஜயவர்த்தனபுர பிட்டகோட்டையில் வாழ்வது (120 h போகவத்தை ரோட் வெளிவிட்ட கடுவல முகவரியில் 1979 ம் ஆண்டு முதல் எழுதி வருகிறேன்.ஆயினும் 1985 ம் ஆண்டில்தான் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில்ஒலிபரப்பாகிய ஓர்முடிவில் ஓர்ஆரம்பம் எனும் நாடகத்தின் மூலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகமானேன்.அன்று முதல் இன்று வரையில் பாடல்கள் மொழிபெயர்ப்புகள் நாடகங்கள் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் தொடர்கதைகள் நாவல்கள் என கிட்டதட்ட எண்நூறுக்கும் (800) மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளேன்.ஆறுநாவல்;களை எழுதி முடித்துவிட்டு ஏழாவதுநாவலை எழுதிக் கொண்டிருக்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.

 

பெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்

Raahila-Majnoon

அரங்கேறும் கவிதைகள் எனும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளியான சகோதரி றாஹிலா மஜிட்நூன் 40 வருடங்களாக எழுதிவரும் ஒரு முத்த பெண் எழுத்தாளர்.

கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் பிரகாசிக்கும் இவர், கிண்ணியாவில் 1949ல் பிறந்து வளர்ந்து தற்போது முள்ளிப்பொத்தானையில் வசிப்பவர். க பொ த சாதாரண தரத்தில் ஒரே தடவையில் சித்தியெய்தியதன் மூலம் கிண்ணியாவில் க.பொ.த சாதாரண தரம் சித்தியெய்திய முதல் கிண்ணியா பெண்மணி என்ற பெருமைக்குரியவர். 7 பிள்ளைகளின் தாயான இவர் புஸ்ரா பாலர் பாடசாலை எனும் முன்பள்ளியையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. இச்சகோதரியின் இலக்கிய அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

நேர்காணல்: கிண்ணியா எஸ் பாயஸா அலி

   
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...12810
மொத்த பார்வைகள்...215243

Currently are 28 guests online


Kinniya.NET