பெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்
செவ்வாய்க்கிழமை, 01 மே 2012 16:59

அரங்கேறும் கவிதைகள் எனும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளியான சகோதரி றாஹிலா மஜிட்நூன் 40 வருடங்களாக எழுதிவரும் ஒரு முத்த பெண் எழுத்தாளர்.
கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் பிரகாசிக்கும் இவர், கிண்ணியாவில் 1949ல் பிறந்து வளர்ந்து தற்போது முள்ளிப்பொத்தானையில் வசிப்பவர். க பொ த சாதாரண தரத்தில் ஒரே தடவையில் சித்தியெய்தியதன் மூலம் கிண்ணியாவில் க.பொ.த சாதாரண தரம் சித்தியெய்திய முதல் கிண்ணியா பெண்மணி என்ற பெருமைக்குரியவர். 7 பிள்ளைகளின் தாயான இவர் புஸ்ரா பாலர் பாடசாலை எனும் முன்பள்ளியையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. இச்சகோதரியின் இலக்கிய அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நேர்காணல்: கிண்ணியா எஸ் பாயஸா அலி
பிரபலநாவலாசிரியை ஏ.சி.ஜரீனாமுஸ்தபா அவர்களுடனான