தேவதையின் பாடல்.. (சிறுகதை)
எஸ்.பாயிஸாஅலி
ஒரு மரணவீட்டுக்கான அடர் சோகங்களைத் தன் ஆழ்ந்த மெளனத்தினூடாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது பாரம்பரியமும் ஒருவகையான தெய்வீகக் கலைநயமும் கலந்து நிறைந்த அப்பழையவீடு.
பழைய எனச்சுட்டுவது அதனது நிர்மாணக் காலஅளவையும் வடிவமைப்பையுமே தவிர மற்றப்படி தரையும்,சுவர்களும்,கதவுஜன்னல்களும் அதன் திரைச்சீலைகளும்கூடப் பளபளப்பு குன்றாமலேயே, அதுவும் கிட்டத்தட்ட முதன்முதலாய் 25வருடங்களுக்கு முன் இவ்வீட்டில் என் முதல்காலடி பட்ட ஒளிர்வெயில் நாளொன்றில் நான் கண்டதுபோலவே மினுங்கிக் கொண்டுதானிருந்தது.