Monday, 27, Mar, 10:40 AM

 

வைத்தியசாலை தங்குமிட அறையில் வைத்தியருடன் பெண்ணொருவர் தனிமையில் இருந்தமையை அறித்த பொதுமக்கள், வைத்தியசாலையை முற்றுகையிட்டமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (27) மாலை  3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, “குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதுடைய  வைத்தியர்,   நேற்று (28) இடமாற்றலாகி  செல்லவிருந்தார்.

இந்நிலையில், இவ்வைத்தியருக்கு சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கும் நெருங்கிய உறவு இருந்துள்ளது. அப்பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றி வருவதுடன், அவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.

திடிரென வைத்தியருக்கு இடமாற்ற உத்தரவு  கிடைக்கப்பெற்ற நிலையில் தான் சேவை மேற்கொண்ட  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தனக்கென வழங்கப்பட்ட தங்குமிட  அறைக்கு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது வைத்தியரின்  செயலை அறிந்து  பொதுமக்களும்  வைத்தியசாலை தரப்பின் சிலரும் இணைந்து  தங்குமிட அறையில் இருந்த வைத்தியர் மற்றும் பெண்ணை உடனடியாக அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு அழைத்து செல்ல வேண்டுமென கோஷமிட்டமையால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் முறைப்பாட்டுக்கமைய, சம்பவ இடத்துக்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சென்று, வைத்தியர் மற்றும் யுவதியை பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புபட்ட வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment


மேலும் செய்திகள்

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023