
கிண்ணியா 3 ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த எச்.எச்.சலீம் 1940.09.22 இல் நாவலப்பிட்டியில் பிறந்தவர். ஹனிபா - மர்யம்பீவி ஆகியோர் இவரது பெற்றோர். நாவலப்பிட்டி சென்மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றவர்.
ஆசிரியராக நியமனம் பெற்று கிண்ணியா அல் அக்ஸா பாடசாலைக்கு நியமிக்கப்பட்டார். கிண்ணியாவில் திருமணம் முடித்ததால் தனது நிரந்தர வசிப்பிடத்தை கிண்ணியாவுக்கு மாற்றிக் கொண்டார்.

இவரது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மாநகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது ஜனாஸா அடக்க இலக்கம் 129 ஆகும்.
அவ்வா உம்மா இவரது வாழ்க்கைத்துணைவி. ஜுஹாரா மன்சூர், ஜுஹைர், பசீன் ஜௌபர், ரூஹூல்ஹக், மர்சூனா றியாத், பர்சானா அஸ்லம், பர்ஹானா றிஸ்வான், ஜெஸ்மினா முஜீப் ஆகியோர் இவரது பிள்ளைகள்.
அல்லாஹூம்மஹ் பிர்லஹூ வர்ஹம்ஹூ
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment