Thursday, 28, Sep, 12:03 PM

 

றஹ்மானியா நகரைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த முகம்மது இஸ்ஹாக் மௌலவி 1950.04.15 ஆம் திகதி பிறந்தவர். இவரது பெற்றோர் அப்துல் கரீம் - சதக்கும்மா ஆகியோர்.
 
தனது ஆரம்பக்கல்வியை சின்னக் கிண்ணியா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் (அல் அக்ஸா கல்லூரி)  இடைநிலைக் கல்வியை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றவர். 
 
றஹ்மானியா அறபுக் கல்லூரியில் ஓதி மௌலவி பட்டமும் பெற்றவர். ஹதீபாக மற்றும் மௌலவி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 
 
2021.05.14ஆம் திகதி சுகவீனமுற்ற இவர் கிண்ணியா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இவரது ஜனாஸாவில் மேற்கொள்ளப்பட்ட  பீ.சீ.ஆர். பரிசோதனையின் போது கொரோனா என உறுதிப்படுத்தப் பட்டதால் இவரது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மாநகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது அடக்கஸ்தல இலக்கம் - 155 ஆகும். 
 
ஸாலிஹா உம்மா இவரது வாழ்க்கைத்துணைவி. பாத்திமா சிபா, சாஜிதா, மாஜிதா, முகம்மது ஜெம்ஸித், பெரோஸா, முகம்மது ஜெஸ்மித், முகம்மது பஹ்மி ஆகியோர் இவரது பிள்ளைகள்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners