கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (12) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஈத்தல்வெட்டுனுவெவ- கொக்கபே அணைக்கட்டு பகுதிக்கு காடு வெட்டுவதற்காக ஐந்து பேர் சென்றதாகவும் காட்டை வெட்டிக் கொண்டிருக்கும் போது யானை தாக்கியதாகவும் இதனையடுத்து குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.தாஜூர் (54வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கஹடகஸ்திகிலிய பொலிசார் தெரிவித்தனர்.
(அப்துல்சலாம் யாசீம்)
Comment